26 Feb 2012

காத்தாடி



என்னடா பண்றே, பேப்பரை கிழிச்சு!
ஓ, அப்பா இவ்வளவு சீக்கிரம்  வருவார்னு தெரிஞ்சிருந்தா சீக்கிரமா வேலைய  முடிச்சிருக்கலாம்! பேப்பர், கத்தரிக்கோல், மைதாப் பசை, நூல்கண்டு எல்லாம் என்னைப் பார்த்து சிரிக்கிறது.
என்ன காத்து வீணாப்போவுதுன்னு காத்தாடி செய்யரியா? சரி சரி, போ!
பத்து  நிமிஷத்தில் அப்பா வந்தார் கையிலே புதிதாக கீறி எடுத்த தென்னங்குச்சி. முக்கோணமா பேப்பரை கிழிச்சு ஒட்டி, நடுவிலே தென்னங்குச்சி, பிறை நிலா கீற்று மாதிரி! அதற்கு ஒரு வால்! ஆயிற்று நூலை காத்தாடியோட சேத்துக் கட்டி, தோழர்கள் புடைசூழ மைதானத்துக்கு வந்தோமா!
கூடவே அப்பா! நீ நூல இழு, நான் காத்தாடிய மேல விடறேன்.
நூல நான் இழுக்க அப்பா காத்தாடிய மேல தூக்க, காத்து ஒரு வீசு வீசி காத்தாடிய  மே.........ல தூக்க ஒரே கொண்டாட்டம்.
காத்தாடி விடறதுலதான் எவ்வளவு சந்தோஷம். நீலவானத்தில கண்ணுக்குத் தெரியாத நூலில பறக்கும் 
காத்தாடியே மேல பறக்குற சுகம் எப்படி இருக்குன்னு சொல்லேன்.
வானத்திலே காத்தாடிய பார்த்தா அப்பா ஞாபகம் வருது!

4 comments:

  1. Wonderful. Holding on to our memories with emotions is like holding on to the kite through the thread.

    ReplyDelete
  2. ஆஹா, அற்புதம்.

    ReplyDelete
    Replies
    1. நினைவு நூலில் விட்ட பட்டம். நன்றி.

      Delete