15 Feb 2012

சொந்தம்

உன்  வீடு   மட்டுமே  உனக்குச்  சொந்தம்!
அதுவும்  குறுகிய காலம்.
சுயமாய்ச் சிந்தித்து,
விரும்பியதை  விரும்பியவாறு
விருப்பம் போல் வசிக்கும் இடம்......இரண்டு,
இந்த  உடல் -உன்  வீடு!
அற்புதமாம் - உன்  மனம்.
பறக்காமல் பறக்கும்  பறவை!
மண்ணிலோ  வானிலோ
அண்ட  சராசரங்களிலோ - சிறகடித்து
உயர உயர-- சுதந்திரமாய்
எங்கேயும் , எப்போது  வேண்டுமானாலும்
எந்நேரத்திலும்  சிறகடித்து................
சிறைப் படுத்தமுடியாத
அற்புதப் பறவை!  என்னுடைய ஒரே சொந்தம்!

No comments:

Post a Comment