2 Dec 2011

தவம்


யாருமில்லாத வெறுமையில் காலடி ஓசை கேட்க மோனத்தவம்
செய்யும் அன்னை வீடு. தெய்வப் பாடல்களைக் கேட்டுக் கேட்டு
சுவைத்து மகிழ்ந்த சுவர்கள். சாவித்ரி காவியத்தைக் கேட்டுப்
பரவசமடைந்த தென்றல் காற்று. அவர்கள் இருவரும் இணைந்து
இசைத்த ‘ஆனந்தமயி,சைதன்யமயி ‘நிறைந்த அறைகள்!
ஶ்ரீஅரவிந்தர், அன்னை, வள்ளலார், ரமணர் சாட்சியாக இருவரும்
ஆன்மாவின் துணைவர்களாய் தவம் செய்த இல்லம்.
விதியால், காலனால், பிணைந்த கைகள் பிரிந்த நேரம்
பிரியமுடியாத சோக கீதம்! மீண்டும் இசை கேட்குமா?
காலடிகள் ஓசையின்றி உள்ளே வந்து எங்களுக்குத் துணை
சேர்க்குமா? காலம் பதில் சொல்லுமா? காத்திருக்கும் …..வீடு!

No comments:

Post a Comment