14 Mar 2012

அஸ்ஸாமியக் கவிதை- மொழிபெயர்ப்பு

தூண்டுதல்

அந்தி மாலைப் பொழுதில்
வயல் வெளிகளுக்கு நடுவே
அவன் செல்கின்றான்.
சூரியனின் ஒளி அவன்
சிரஸை வருடுகிறது.
இரு புறமும் கூடைகள்
தொங்கும் மூங்கில் அவன்
தோள்களில்!
இலையுதிர் காலச் சூரியன்
அவன் பின்னால் மறைந்தது.
கூரை வேய்ந்த வீடுகளுடைய
சிறு கிராமம். கல்லும்
முள்ளும் நிறைந்த பாதை!
இரு புறமும் புதர்கள்.
பறவைகளின் இனிய இசை!
அவன் அவ்விடம் விட்டுச்
செல்கின்றான்! யாருக்குத்
தெரியும் இந்த ஜன்மத்தில்
அவன் வருவானா என்று!

This is my translation of one of the poems from 
The Three Score Assamese Poems -compiled and translated by D N  Bezboruah
National Book Trust, India.

No comments:

Post a Comment