28 Oct 2012

ஹிந்திஜி-ஆமாங்க!

                வட இந்தியாவில் பல ஆண்டுகள் வசித்த எங்கள் உறவுகள் சிலர் விடுமுறைக்கு வருவார்கள். பேசிக் கொண்டே இருக்கும் போது திடீரென்று ஹிந்தியில் பேச ஆரம்பித்து விடுவார்கள். அவர்களுக்குள்ளே சுவாரஸ்யமாக பேச்சு நடக்கும். ஹிந்தி பாஷை தெரியாததால் நாங்கள் முழித்துக் கொண்டிருப்போம். பேசுபவர்களுக்குத் தெரியும் நமக்குப் புரியாத மொழியில் அவர்கள் பேசுகிறார்கள் என்று. வேண்டுமென்றே எரிச்சல் மூட்டுவதற்காகப் பேசுவார்கள்.

அவர்களுக்கு சரியான தமிழோ, ஆங்கிலமோ பேசவராது. என்றாலும் நமக்குத் தெரியாத பாஷை அவர்களுக்குத் தெரியும் அல்லவா? என் மாமியார் எப்போதும் ஹிந்தி சினிமா, ஒளியும் ஒலியும் பார்ப்பார். புரியாத மொழியின் படத்தை ஏன் பார்க்க வேண்டும் என்று எனக்குப் புரிய சிறிது காலம் ஆயிற்று! அடிக்கடி மகன் வீட்டிற்குப் போகும் போது இந்த பாஷைப் பிரச்சினையை சமாளிக்க, அடிப்படையான தேவையான வார்த்தைகளை உபயோகிக்க அவர் யாருடைய உதவியும் இல்லாமல் கற்றுக் கொண்டவிதம்  பாராட்டுக்குரியது.

வட இந்தியாவில் காசி, கயா, பத்ரிநாத் பயணத்தின் போது ரயிலில் பயணம் செய்தோம். சக பயணிகளிடம் ஆங்கிலத்தில் ஏதோ கேட்க, 'ஹிந்துஸ்தான் மே அங்ரேஸி போல்தே ஹை?' என்று சொல்லி பதில் கூற மறுத்துவிட்டார்கள்.

 எல்லாவற்றுக்கும் அச்சா,போடவேண்டும். ஒரு ஹை, ஹு வேண்டும், 'தமிழ் ஹை, ஹிந்தி தோடா, தமிழ் தோடா,' கொஞ்சம் மாலும்ஜி,  ஆனா பஜ்ஜி மட்டும் இல்லஜி, சப்ஜி இருக்குஜி, என்று வேடிக்கை செய்வோம்.
ஹிந்தி தெரிந்தால் ஹை ஹீல் காலணி போட்டுக் கொண்டது போல்!

''ஜாடு , போச்சா, கரோ,'' என்று உதவியாளரிடம் சொல்ல, பாட்டியம்மா, என்ன போச்சு  என்று கேட்க, வீடு பெருக்கித் துடைக்கச் சொல்கிறார் என்று புரிந்தது.

பாமா விஜயம் படத்தில் செளகார் ஜானகி ஹிந்தி பேசுவார்களே, அதைப் பார்த்து தமிழ் ரசிகர்களுக்கு ஒரே குஷி.

தமிழ் நாடு ஹிந்தி எதிர்ப்பு மாநிலம்! என்னுடைய கல்லூரி நாட்களில்தான் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தது. கொடி பிடித்திருக்கிறோம்! எனவே இயற்கையாகவே ஹிந்தி கற்றுக் கொள்ளப் பிடிக்கவில்லை

என்னதான் ஆங்கிலம் படித்தாலும் பேசும் போது சந்தேகம் வந்துவிடும். வீட்டில் இருப்பவர்களே கேலி செய்வது புதிது அல்ல. ஹிந்து பேப்பரைப் படித்தால் ஆங்கில அறிவு வளரும் என்பார் அப்பா

இப்போது பாருங்கள் கணினியைப் பயன் படுத்த, செல்போனின் நுணுக்கங்களைத் தெரிந்து கொள்ள  இளைய தலைமுறையைப் போல் பெரியவர்களுக்குத் தெரிவதில்லை.

அட, கொஞ்சம் உதவி என்றால், 'உனக்கு என்னதான் தெரியும்' என்று இந்தக்காலப் பசங்க கேலி பேசுவது, சும்மா ஒரு இதுக்காக. அவங்களுக்கென்ன ஏதாவது தப்பாப் போனா 'டேக் இட் ஈஸி டாட், இட் ஈஸ் எ லேர்ணிங் ப்ரோசஸ்' என்பார்கள். ஆகா, என் பையன் எப்படி எல்லாம் கத்துக்கிட்டான், ஹீ ஈஸ் எ  ஜீனியஸ்' என்பார் தந்தை.

அதுவே மனைவியென்றால்,'நீ எதுக்கு இதையெல்லாம் செய்யறே? உனக்கு ஒன்னும் தெரியாது. பையனைக் கேட்க வேண்டியதுதானே' என்பார்.

ஐயோ, இங்கிலீஷ், விங்லீஷ் படம் பார்த்ததால் வந்த வினை! ஶ்ரீதேவி மென்மையான மனம் புண்பட்ட இல்லத்தரசியாக தன் உணர்ச்சிகளை இயல்பாகக் காண்பித்து இருக்கிறார். அதே சமயம் கற்றுக் கொள்ளும் ஆர்வம், அதற்கான விடா முயற்சி, இவற்றுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.

 நிஜ வாழ்வில் எத்தனையோ 'சசிகள் ' இருக்கிறார்கள்!

ஆனால் தியேட்டர்களில் அப்படி ஒன்றும் கூட்டத்தைக் காணவில்லை. See this ஒன்னும் பகுத் தொட்ட
காரியம் நஹி! ஏமிரா, சால நல்லா இருக்கீங்களா?

தலை கெட்டுப் போச்சுன்னு நினைக்கிறீங்களா?!.....................எங்கு போனாலும் சமாளித்துக் கொள்ளத் தெரியும் என் உதவியாளருக்குக் கூட. What big deal?









2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. ஹிந்தி மொழியை தனியாக படித்திருந்தாலும், ஹிந்தி எதிர்ப்பு போராட்ட காலத்திலிருந்து அம்மொழி மீதான ஒரு விருப்பமின்மை [ வெறுப்பு என்று சொல்ல ஒப்பவில்லை] இருந்து கொண்டுதானிருக்கிறது. நகைச்சுவையாக எழுதியிருந்தாலும் ஒரு கனமான கருத்து உள்ள பதிவு.

    ReplyDelete