11 Jul 2012

Twinkle, Twinkle Grandpa Star

பாட்டி வீடு இருக்கும் காலனியில் இளந்தாய்மார்கள் அணி ஒன்று உண்டு. அதிலே பெரியவர்களிடம் மதிப்பும், மரியாதையும், உடைய பெண் லஷ்மி. கணவருக்கு பெரிய வேலை. மூன்று பெண் குழந்தைகளுக்குத் தாய். பெரியவளுக்கு ஆறு வயதான போது ஒரு வயது வித்யாசத்தில் இரண்டு பெண்கள்.
மூன்றும் மூன்று முத்துக்கள். திவ்யா பகவத் கீதையும், குட்டிகள் இரண்டும் தெய்வப் பாடல்கள் கற்றுக் கொள்ளவும் பாட்டியிடம் வருவார்கள். தாத்தாவிடம் கேள்விகள் கேட்பார்கள். வெகு சீக்கிரம் கற்றுக் கொடுத்தவற்றைக் கற்றுக் கொள்வார்கள். பயமெல்லாம் கிடையாது! யார் பாடச்சொன்னாலும் பாடுவார்கள்.
அங்கு கட்டிடத்தின் மேல் பகுதியில் தேனீக்கள் கூடு கட்டியிருந்தன. நடந்து கொண்டிருந்த பாட்டியிடம் ஓடி வந்தாள் அக்ஷயா.'' பாட்டி, அது தேன் கூடு தானே?''
ஆமாம்  அதிலிருந்து தான் தேன் கிடைக்கிறது.  உனக்கு பிடிக்கும் இல்லையா?
 தேனை எப்படி எடுப்பாங்க? -அடுத்த கேள்வி. பதில் கிடைத்ததும்,
''அப்பிடின்னா, நாம்ப தேனிய எல்லாம் கொலை பண்ணிட்டு தேனைத் திருடரோமா?
நான் இனிமே தேனே சாப்பிடமாட்டேன்,'' என்று தீர்ப்பு சொல்லிவிட்டுப் போனாள். ஒரு குழந்தையின் கருணை நிறைந்த இதயத்தின் வெளிப்பாடு.
 காலையில் பள்ளிக்கூடம் போக பஸ் ஏற தாத்தா வீட்டு முன்னால்தான் நிற்க வேண்டும்.
கைஅசைத்து டாட்டா காட்டும் தாத்தா ஒரு நாள் டாட்டா காட்டிவிட்டு மேலுலகம் போனார்.

பாட்டியிடம் வந்தார்கள் அக்ஷயாவும்,ஹரிப்ரியாவும். ''பாட்டி, பாட்டி தாத்தா எங்கே போனார்? சாமிகிட்ட போயிட்டார்னு அம்மா சொல்றாங்க.'' பாட்டி சிரித்தாள்.
பாட்டி, ப்ரியா சொல்றா, தாத்தா 'ஸ்டார்' ஆயிட்டார்னு-இதுஅக்ஷயா.
ஆமாம், உங்க வீட்டுக்கு மேல ராத்திரியில தெரியுது இல்லியா? அதுல ஒரு நட்சத்திரம்தான் தாத்தா!==இது ஹரிப் ப்ரியா.
தாத்தா அங்கே இருந்துதான் நம்பளை எல்லாம் பாத்துட்டு இருக்கார் -இது அக்ஷயா
நாளைக்கு எனக்கு கணக்கு 'எக்ஸாம்' இருக்கு. சாமி ஆனதனாலதான் தாத்தா ஸ்டார் ஆயிட்டார். நான் தாத்தாவ வேண்டிகிட்டா நான் பரிட்சை நல்லா எழுதுவேன், தெரியுமா?--இது ஹரி ப்ரியா.
அக்ஷயா,ஹரிப்ரியா,  நீங்க ரெண்டுபேரும் சரியா படிச்சாதான் நல்லா பரிட்சை எழுதமுடியும். படிக்காம தாத்தா ஹெல்ப் பண்ணமாட்டார், இது பாட்டி.
பாட்டி, பாட்டி பக்கத்து வீட்டில இருக்காரே சாந்தாவுடைய தாத்தா, அவருக்கு நம்ம தாத்தாவவிட நாலு வயசு ஜாஸ்தினு அம்மா சொன்னாங்க. அவரு இன்னும் இருக்காரே, ஏன் பாட்டி, நம்ம தாத்தா மட்டும் சாமிகிட்ட போனாரு?
 வயதானவர்கள் யார் வந்தாலும் அக்ஷயா இந்தக் கேள்வியைக் கேட்கிறாள்!
குழந்தைகளின் கேள்விகளுக்கு யாரால் பதில் சொல்லமுடியும்?


No comments:

Post a Comment