11 Mar 2018

நாட்டுப் பற்று

பல ஆண்டுகளுக்கு முன் அந்தமானின் அழகைப் பார்க்க வேண்டுமென்று   நானும் கணவரும் ஒரு பயணம் மேற்கொண்டோம்.
 இயற்கை அழகு மிக்க அந்த ஊர் இந்திய சுதந்திர வரலாற்றில் முக்கியப் பங்கு வகித்தது.

பிரிட்டிஷ் அரசாங்கத்தின்  வன்முறைகளுக்கு பெயர் பெற்றது அந்த மானின் தனிமைச் சிறை.
வங்கத்து இளைஞர்கள் தங்கள் சொந்த வாழ்க்கை, சுக போகங்களை விட்டுவிட்டு சுதந்திரத்திற்காகப் போராடி புன்முறுவலோடு அந்தமான் தனிமைச் சிறைசாலையின் அளப்பறிய கொடுமைகளையும் தாங்கிக் கொண்டார்கள்.

குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்தி விட்டு, சகல செல்வங்களையும் இழந்து சவார்கர் என்ற இளைஞன் சுதந்திரப் போராட்டத்தில் துணிவோடு இறங்கினான். அவனும் அந்தமானுக்கு அனுப்பப்பட்டான்.  அங்கே அவன் தாங்க வேண்டி வந்த கொடுமைகள் அவனைத் தன்னை மன்னிக்கும்படி பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திடம் மன்னிப்புக் கோர வைத்தது என்றால் அவர் பெற்ற தண்டனைகள் எப்படி இருந்திருக்க வேண்டும்?

மன்னிப்பு கேட்டது தவறாம். ஆளாளுக்கு  கேவலப் படுத்துகிறார்கள். ஆனால் அதே பிரிட்டிஷாரிடம் வெட்கமில்லாமல்  இன்றைக்குப் போய் கை கட்டி உத்யோகம் பார்ப்பதை விடவா கேவலம்?

ஆம், பிஜேபி அரசு அவருடைய தியாகங்களைக் கொண்டாடுகிறதாம்.! பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமன் அங்கே சென்று மரியாதை செலுத்துகிறாராம்!

ஒருவர் சொல்கிறார் அந்தமான் சிறைக்குப் போனவர்கள் எல்லாம் கம்யூனிஸ்டுகளாம்! இன்னொருவர் சொல்கிறார் வீரசவார்கர் உண்மையான வீரர் இல்லை, பிரிட்டிஷ் அரசிடம் மன்னிப்புக் கேட்டவர்! இதையெல்லாம் படிக்கும் போது புத்திகெட்ட அந்தக் கால  இளைஞர்கள் எதற்கு இவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்று தோன்றுகிறது.

ஒரே ஒரு நாள் உங்கள் செல்போன், கணினி எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு அந்தமான் போங்கள். அங்கு பார்வைக்கு வைக்கப் பட்டிருக்கும் சாக்கு மூட்டையால் தைக்கப்பட்ட அரைக்கால் டவுசரையும், மேல் சட்டையையும் போட்டுக் கொண்டு நாள் முழுதும் தேங்காய் உரித்து, செக்கிழுத்து இரவில் அந்த உப்பங்காற்றில்  சாக்கு உடையில் தூங்கப் பாருங்கள்.

அதிக பட்சம் இரண்டு நாள் இருந்து பாருங்கள். பிறகு உயிர்த்தியாகம் செய்தவர்களையெல்லாம்  இழிவு படுத்தும் வேலையைச் செய்யலாம்.

த்தூ!

எங்கே எத்தனைபேர் முன் வருவீர்கள்? இணைய தளத்தில் உட்கார்ந்து கொண்டு குற்றப் பத்திரிகை படித்து தங்கள் அதி புத்திசாலித் தனத்தை விளம்பரப் படுத்திக்கொள்ளாமல் அரை மணி நேரம் இருக்க முடியுமா?

ஒரு நாட்டின் சரித்திரம், படித்து தியாகம் செய்தவர்களை நினைவு கூறத்தான். எல்லாவற்றுக்கும் குற்றம் கண்டு பிடித்து பெருமையோடு அதனை சொல்லுவது தன்னைத் தானே இழிவு படுத்திக்கொள்வதாகும்.

No comments:

Post a Comment