29 Aug 2013

கோகுலாஷ்டமி


கண்ணன் பிறந்தநாளில் முன்பெல்லாம் பக்த மீரா படம், எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அம்மாவின் காற்றினிலே வரும் கீதம் எங்கும் நிறையும்!

ஒரே நேரத்தில் எங்கும் இருக்கும் வல்லமையுடையவன் என்பதை உணர்த்தவே ஒவ்வொரு வீட்டிலும் கண்ணனின் பாதங்களை கோலமாக வரைகிறார்கள்.

உலக மேடையில் வாழ்க்கை விளையாட்டை நன்கு விளையாடத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று உணர்த்துகிறது கண்ணனின் பிருந்தாவன லீலைகள்.

தனிப்பட்ட ஆற்றல் உடைய குழந்தை என்பதாலேயே கண்ணன் பிறந்த நாளில் முறுக்கு, சீடை ஆகிய கடிக்கக் கடினமானவற்றை நிவேதனம் செய்கிறோம்.

வெண்ணெய்க்கு 'நவநீதம்' எனப் பெயர் உண்டு. ஒரு முறை தயிர் கடைந்து வெண்ணெய் எடுத்து விட்டால் அது மீண்டும் கரையாது.

அது போல உலக வாழ்க்கை என்ற மோரிலிருந்து மனம் என்ற வெண்ணெயை பிரித்து எடுத்து கண்ணனிடம் ஒப்படைத்து விட வேண்டும்.

கண்ணன் திருவடிகளில் நிலைத்த மனத்தை கண்ணனே கவர்ந்து கொள்வான். அதனால் அவனை நவநீதசோரன் எனப் போற்றுவர்

கண்ணனை யோகேஸ்வரன் என்று மஹாபாரதம் போற்றுகிறது.

'கோ' என்ற வடமொழிச் சொல்லுக்கு 'பசு'என்று பொருள்.எல்லா ஜீவராசிகளுமே பசுக்கூட்டங்கள்.இவற்றைப் பரிபாலிப்பதால் கோபாலன்.

இந்திரியங்களுக்கு எல்லாம் தலைவன் ஆதலால் 'ஹ்ருஷிகேசன்.

ஜீவர்கள் எல்லோரும் கோபிகளே என உணர்த்தும்-'கோபிநாதன்' என்றபெயர்.

ஜகத்திலுள்ள அத்தனை உயிர்களுக்கும் உயிராய் இருக்கின்றான் ஆதலால்,'ஜகன்நாதன்'

மா- இலட்சுமி, தவ - தலைவன், இலட்சுமியின் தலைவன் ஆதலால் 'மாதவன்'

தன் பெரு நிலையிலிருந்து இறங்காதவன் எனவே,'அச்சுதன்'

கருநீலவண்ணமுடையவன், எனவே கிருஷ்ணன்,

கேசின் என்ற அசுரனை வென்றவன், அழகான ரோமத்தை உடையவன் எனவே'கேசவன்'

கோ-உயிர், விந்தன் - அறிபவன். உயிர்களின் உள்ளத்தில் இருப்பதை நன்கு அறிந்தவன் கோவிந்தன்

மது என்ற அரக்கனைக் கொன்றவன் - மதுசூதனன்

பார்த்தனுக்குத் தேரோட்டியவன் - பார்த்த்சாரதி

குதிரை வடிவெடுத்த கேசி என்ற அசுரனின் வாயினுள் கை நீட்டி, குடலைக் கசக்கிக் கொன்றதால்'கேசிநிஷூதனன்'!கைவலிவைக் காட்டியதால் 'மகாபாகு'

''பயனை விரும்பியோ, ஆடம்பரத்திற்காகவோ செய்யப்படுகிற ஆராதனையை நான் விரும்புவதில்லை.

துன்புறுத்தாத வாய்மையும் இனிமையும் நலனும் கூடிய வார்த்தை, இது வாக்கு மயமான தபசு எனப்படுகிறது.

மனவமைதி, அன்புடைமை, மெளனம், தன்னடக்கம், தூய நோக்கம் - இது மனதால் செய்யப்படும் தவமாகும்.''பகவத்கீதை

''பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடிநூறாயிரம்
மல்லாண்ட திண்டோள் மணிவண்ணா! உன் செவ்வடி செவ்விதிருக்காப்பு''

'அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றியாயிரம் பல்லாண்டு வடிவாய் நின்வலமார்பினில் வாழ்கின்றமங்கையும் பல்லாண்டு.

''எந்தை தந்தை தந்தைதந்தை தம்மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி வந்து வழிவழியாட் செய்கின்றோம்'' பெரியாழ்வார்

யோகேஸ்வர ஸ்ரீகிருஷ்ணன் அருளால் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
பி. லீலாவின் குரல் குருவாயூரப்பனை வர்ணிப்பதைக் கேட்டு மகிழுங்கள். கீழே சுட்டி.


http://www.devaragam.com/vbscript/WimpyPlayer_ext.aspx?ord=t&var=12207

2 comments:

  1. Most beautiful. Yesterday, I was talking of the same to my son. In today's scenario it is butter from the grocery store, murruku, seedai and thattai from Adayar Ananda bhavan..and fruits. I remember the festive atmosphere and the excitement the occasion generated. You took me to those good old days, Amma.

    ReplyDelete
  2. Thank you for the nice comment.

    ReplyDelete