27 Aug 2013

யாதும் ஊரே......



ஒரு நாள் உங்களோட ஊர் சுத்த ஆசையா இருக்கு, ஜெயநகர் வாங்கன்னு பேரன் சொன்னான். சரிதான் அவன் ஆசையைக் கெடுப்பானேன் என்று சரியென்றேன். இன்னிக்கு வாங்க, கொஞ்சம் ஷாப்பிங்,  பின்னாலே ஜெயநகர் மையாஸ்ல லஞ்ச் சாப்பிடலாம், என்று சொல்ல காலையில் எழுந்ததும் தயாரானேன்!
கிட்டத் தட்ட இரண்டு மாதத்திற்குப் பின் ஆட்டோல  ஏறினேன். ஆட்டோ ஓட்டுநர்
சங்கர், இளைஞர். ஒல்லியான உடம்பு, அரும்பு மீசை, ஆனால் கண்ணாடி.  முதலில் ஜே. பி. நகர் வழி தெரியுமா என்று கேட்டேன். தெரியும் என்றார்.
சீதா சர்க்கிள் போனதுமே ரிங் ரோட்டில் திருப்ப இருந்தவரை, 'லெஃப்ட் ஹோகி,' என்றேன். அஜ்ஜி ரிங்ரோட்தான் சிக்னல் இல்லாம சீக்கிரம் போற வழி என்றார்.
வித்யாபீடம், வந்தவுடன் அஜ்ஜி ரைட்டா, லெஃட்டா, ஸ்ட்ரெய்ட்டா? ஹேளி, என்றாரா,'' இதோ பாரு 'பேரா' எனக்கு எல்லா வழியும் தெரியும், உனக்கும் தெரியும், தகராரு செய்யப்போறேன்னா சொல்லிடு. இறங்கிக்கிறேன்,'' என்று சொன்னேன். வண்டி கொஞ்சம் கன்னாபின்னான்னு பறந்தது. நீங்க எனக்கு வழி சொல்லாம வாங்க, என்னா? காது கேக்குதா அஜ்ஜி?  என்றார். பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டேன். நல்ல குணாதிசயம் உள்ள ஆளுதான். ஒரு வழியாக இறங்க வேண்டிய இடத்தில் நிறுத்தினார்.
என்னுடைய ஆசீர்வாதமாக  ஐந்து ரூபாய்!
பாக்கியை வாங்காமல் விட்டதில சங்கருக்கு சந்தோஷம்.  
முன்பின் அறிமுகம் இல்லாதவருடைய 'அஜ்ஜி ' ஆனதில எனக்கு சந்தோஷம். 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்'  அல்லவா?

1 comment: