22 Nov 2017

22-11-17-கூகுள் சிறப்பிக்கும் இரும்புப் பெண்மணிகள்- மதிப்பிற்குரிய ருக்மாபாய்

தன்னம்பிக்கையும்,மன உறுதியும்,விடாமுயற்சியுமுடைய பெண்கள்  பலரும் வாழ்ந்த நாடு நம் பாரத நாடு. இவர்களில் மருத்துவத் துறையில் சிறந்த பணியாற்றிய மதிப்பிற்குறிய ருக்மாபாய் அவர்களை கூகுள், டூடுல் எனப்படும் ஓவியம் மூலமாக சிறப்பித்துள்ளது

கேள்விப்படாத பெயராக அல்லவா இருக்கிறது? அப்படியென்ன புதுமையை இவர் செய்தார்?
பதினெட்டாம் நூற்றாண்டில் கடல் கடந்து சென்று ஒரு பெண் மருத்துவம் பயில்வதும், விருப்பமில்லாத திருமண உறவிலிருந்து மணமுறிவு பெறுவதும்
பெரிய சாதனைகள் அல்லவா?

1864 ஆம் ஆண்டு பம்பாயில் வசித்த ஜனார்தன் பாண்டுரங்கா, ஜெயந்திபாய் தம்பதியருக்கு மகளாய்ப் பிறந்தார்  ருக்மாபாய்.அவருடைய 8 ஆம் வயதில் தந்தையை இழந்தார். 11 ஆம் வயதில் தாதாஜி பிகாஜி,என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். ருக்மாபாயின் தாய் ஜெயந்திபாய், சகாராம் அர்ஜுன் என்ற தலைசிறந்த மருத்துவரை மறுமணம் செய்துகொண்டார்.

ருக்மாபாய் திருமணத்திற்குப் பிறகும் தன் தாயுடனும்,வளர்ப்புத் தந்தையுடனுமே வாழ்ந்து வந்தார். அவரை மணம் புரிந்த தாதாஜி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து  தன் மனைவி தன்னுடன் வந்து வாழ வேண்டும் என்று விண்ணப்பித்தார். ஆனால் விருப்பமில்லாத ஒருவருடன் வாழ முடியாது என்று மறுத்தார் ருக்மாபாய். இந்த வழக்கு மூன்றாண்டுகாலம் நடந்தது. இந்த வழக்கு குறித்து பல விவாதங்களும் இந்தியாவிலும், இங்கிலாந்திலும் நடந்தன. இறுதியில் ருக்மாபாய் கணவருடன் வாழ வேண்டும் அல்லது ஆறு மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றது நீதி மன்றம்! ருக்மாபாயோ சிறை தணடனையை அனுபவிக்கவே தயாராயிருந்தார்.இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணியார் நீதி மன்றத் தீர்ப்பை ஒதுக்கித் தள்ளினார்
மாறுதலை விரும்பாத பழமைப் பற்றாளர்களின் எதிர்ப்பையும் மீறி திருமண வயது நிர்ணயச்சட்டம் 1891 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
1888ல் சட்டப்படி விவாகரத்து பெற்றார் ருக்மாபாய்!

பிறகு மருத்துவம் பயில இங்கிலாந்து சென்றார். பலருடைய ஆதரவினால் மருத்துவப் படிப்பை சிறப்பாக முடித்த ருக்மாபாய் 1894 ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார்.சுமார் 35 வருட காலம் சூரத், ராஜ்கோட், பம்பாய் ஆகிய இடங்களில் பணியாற்றினார். 1955 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி இயற்கை எய்தினார்

ஒரு மருத்துவராக அவர் ஆற்றிய தொண்டு பாராட்டற்குரியதுஅதே நேரத்தில் தன்னுடைய சுதந்திரத்திற்காக அவர் மன உறுதியுடன் போராடி, மணமுறிவு பெற்றது ஆழ்ந்து சிந்திப்பதற்கு உரியதாகும்.

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களும்  மன உறுதியும், தன்னம்பிக்கையும் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு ருக்மாபாயின் வாழ்வு ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என நம்புகிறேன்.
-நன்றி,கூகுள்



No comments:

Post a Comment