4 Jun 2018

நீலவானமும் சங்கு புஷ்பமும்

சங்கு புஷ்பம்சங்கு வடிவில் இருப்பதால் இந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள் போல இருக்கிறதுதமிழில் இதனை சங்குப்பூ என்பார்கள்
சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கருவிளை மலர்தான் இது! கருவிளை-நீலநிறச் சங்குப்பூ.
செருவிளை- வெள்ளை நிறச் சங்குப்பூ.
ஏழு ண்ணங்களில் ஒன்று நீலம்! ஐந்து வண்ணங்களை ஒன்றாய்க் காணும் போது இதனைக் கருமை எனக் கொள்வர்! எனவே இது கரிய விளைப் பூ
இதனை, “ மணிப்பூங் கருவிளைஎன்கிறது குறிஞ்சிப் பாட்டு.

இந்த சங்குப் பூவை அழகாக பல வடிவங்களில் அடுக்கி வைத்து அழகு பார்ப்பது எனது பொழுது போக்கு!   எங்கள்  தோட்டத்தில் ஒரு நாள் பூத்துக் குலுங்கிய சங்குப் பூக்களை சேமித்த போது என் மகளின் கண்களுக்கு மயிலின் வடிவம் மனதில் தோன்றிவிட்டது! என்ன ஆச்சர்யம் சிறிது நேரத்தில் மயிலொன்று அங்கே தோகை விரிய அமர்ந்திருந்தது!@Neelavanam

மலர் கொண்டு இறைவனை ஆராதிப்பது தொன்று தொட்டு தொடர்கின்ற
வழக்கமாகும். பெருமாளுக்கு துளசி, சிவனுக்கு வில்வம், என ஆராய்ந்து ,உணர்ந்து  மலர்களால் ஆராதனை செய்கிறார்கள்.

அதே போல் புதுச்சேரி அன்னை மலர்களைப் பற்றியும், அவற்றின் குணங்களையும், அந்தந்த மலர்களால் வழிபடும் போது கிடைக்கக் கூடிய பலன்களைப் பற்றியும் விரிவாகக் கூறியிருக்கிறார். அந்தப் பட்டியலில் சங்குப் பூவுக்குராதையின் பிரார்த்தனைஎன்ற அழகிய பெயரை அளித்திருக்கிறார்

பக்தி இலக்கியத்தில் கண்ணனும், ராதையும் இணை பிரியாதவர்கள். அத்தனை கோபியரின் பக்திக்கெல்லாம் மேலே ராதை பல மடங்கு உயர்ந்தவள் ! ஏனென்றால் அவளுடைய அன்பு அத்தனை தூய்மையானது!
பரிபூரண சரணாகதி தத்துவத்தின் உதாரணமாகத் திகழ்பவள் ராதை!
அதை உணர்த்தும் வகையில் ஒரு அழகிய கதை உண்டு
ஒரு முறை கண்ணபிரானிடம் நாரதர் , ‘ பிரபோ நீங்கள் எல்லோரையும்விட இராதைக்குத் தனியிடம் கொடுத்திருப்பதன்  காரணத்தை அறிந்து கொள்ள விரும்புகிறேன்,’ என்றார்.

அதற்குக் கண்ணன், நாரதரே நீங்கள் மூவுலகமும் சென்று , “கண்ணன்
தலைவலியால் வருந்துகிறான்! அதைத் தீர்க்கும் மருந்து ஒன்றுண்டு! அதாவது என்னிடம் மாறாத அன்புடையவர்கள் யாரானாலும் அவர்கள் பாதம்பட்ட மண்ணை நான்  பூசிக்கொண்டால்தான்  என் தலைவலி நீங்கும் ! யார் அவ்வாறு தர விரும்புகிறார்கள் என அறிந்து வாரும். உங்கள் வினாவுக்கான விடை அதில்தான் உள்ளது என்றார்.

மூவுலகமும் சென்றார் நாரதர்! பரந்தாமனின் பாத தூளிகைகளத் தங்கள் தலையில் தரிக்க விரும்பும் பக்தர் கூட்டம், அத்தகைய பாதகச் செயலை யாரால் செய்ய முடியும் எனப் பின் வாங்கியதுஎவருமே முன் வராத நிலையில் இராதையின் முன் சென்று நின்றார் நாரதர்.

நாரதரின் வருகைக்கான காரணத்தைக் கேட்ட இராதை துடித்துப் போனாள்.
உடனே தன் இல்லத்துத் தோட்டதிற்கு ஓடிச்சென்று தான் நின்ற பாததூளிகளை எடுத்து வந்து நாரதரிடம் கொடுத்தாள்! நாரதரே, கண்ணனின் தலைவலி தீருமாயின் எனக்கு எத்தனை பாவங்கள் வந்து குவிந்தாலும் அவற்றை நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வேன். உடனே செல்வீர் எனக் கூறினாள்நாரதர் தன் வினாவுக்கு விடை கிடைத்த மகிழ்ச்சியில் இராதையை வணங்கி, “ ராதே ராதே ராதே கோவிந்தா, “ எனப் பாடலானார்

இந்த பரிபூரண சரணாகதியின் மேன்மையை உணர்த்துவதான சங்குப் பூவுக்குஇராதையின் பிரார்த்தனைஎன்ற பெயர் எத்தனை பொருத்தமாக உள்ளது!


No comments:

Post a Comment